search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித் கேப்டன் பதவி பறிப்பு எதிரொலி? வைரலாகும் சூர்ய குமாரின் இன்ஸ்டா பதிவு
    X

    ரோகித் கேப்டன் பதவி பறிப்பு எதிரொலி? வைரலாகும் சூர்ய குமாரின் இன்ஸ்டா பதிவு

    • குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது.
    • 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது.

    5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இணையதளங்களில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ், இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 'உடைந்த இதயம்' எமோஜியை அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தான் காரணம் என பதிவு செய்து வருகின்றனர். ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.



    "மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமே தயாராக இருங்கள்.. உங்கள் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது" என தீவிர ரசிகை ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×