search icon
என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் திரைப்படம் “தி வாரியர்”. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். 

    இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர்.

    ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
    ஜெகன், ஈடன் நடிப்பில் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துரிதம் படத்தின் முன்னோட்டம்.
    எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சீனிவாசன். இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை போலவே இந்தப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார். 

    'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையால் இந்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

    கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார் இவர் ஏற்கனவே, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் மலையாளம் தெலுங்கு மொழிகளில் ஏற்கனவே நடித்துள்ளார்., கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

    புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என்பவர் வடிவமைத்துள்ளார். 
    எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் மஹா படத்தின் முன்னோட்டம்.
    நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இது அவருடைய 50வது திரைப்படம். இதில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    யு.ஆர்.ஜமீல் இயக்கி இருக்கும் இப்படத்தை, எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன், மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்ரேசன்ஸ் நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார். தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), ஜே.ஆர்.ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

    மஹா படத்தின் போஸ்டர்

    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ஆன்ஸ்கை நிறுவனம் பெற்றுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் முன்னோட்டம்.
    விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.கே.பிரசன்னா மேற்கொண்டுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கரு பழனியப்பன் இயக்கும் ஆண்டவர் படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கரு.பழனியப்பன். இவர் கடைசியாக ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கரு.பழனியப்பன்.

    இவர் இயக்கும் புதிய படத்திற்கு ஆண்டவர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 

    இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விரைவில் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், உருவாகி வரும் மைக்கேல் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சந்தீப் கிஷன் “மைக்கேல்” என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். 

    இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
    அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் திரைப்படம் “நதி”. இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். 

    நதி படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். தற்போது இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    கலாஞ்சலி சினிமாஸ் நிறுவனம் சார்பில் அனில் கலாஞ்சலி தயாரிக்கும் அரிச்சல் முனை படத்தின் முன்னோட்டம்.
    கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘கடத்தல்காரன்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.குமார் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக உருவாகும் ‘அரிச்சல் முனை’ படத்தை கலாஞ்சலி சினிமாஸ் நிறுவனம் சார்பில் அனில் கலாஞ்சலி தயாரிக்கிறார்.

    இப்படத்தில் நாயகன், நாயகியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் யார்? என்ற தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

    இப்படத்தின் துவக்க விழா சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங், வைகாசி ரவி, ருக்மணி பாபு, நடிகையும் டப்பிங் கலைஞருமான கிருஷ்ணா தேவி, சுதா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

    கதை, திரைக்கதை, இயக்கம் எஸ்.குமார். ஜினோ பாபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிபின் அசோக் இசையமைக்கிறார். தீபு பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ஜானி நடனம் அமைக்க, இணை இயக்குநராக தேவா பணியாற்றுகிறார். ஆர்.ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பை கவனிக்க, ராஜேஷ் கே.மதி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். சுஹைல் பல்லக்கல் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, மணிபாரதி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். அனில் கலாஞ்சலி தயாரிக்கிறார்.

    கன்னியாகுமரி, ராமேஷ்வரம், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ள ‘அரிச்சல் முனை’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.
    ஜித்தேஷ் கருணாகரன் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் ஏவாள் படத்தின் முன்னோட்டம்.
    அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் பெயர் சொல்லும்படியான நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அப்படி அவர் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

    பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். மேலும் மதுமிதா, அக்ஷரா ராஜ், பர்சிதா சின்கா, ஆரத்தி கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன், மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஜித்தேஷ் கருணாகரன் இயக்கி இருக்கிறார். 
    ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ஒயிட் ரோஸ் படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ் தற்போது 'ஒயிட் ரோஸ்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மற்றொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார். நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.

    ஒயிட் ரோஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
    ஒயிட் ரோஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்தப் படத்தை ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர். மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. 
    சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ள 'சிட்தி' படத்தின் முன்னோட்டம்.
    சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ள படம் 'சிட்தி' ( SIDDY ). இந்தப் படத்தில் அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

    முக்கிய வேடத்தில் I.M.விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். 

    ஒளிப்பதிவு : கார்த்திக் S. நாயர், இசை : ரமேஷ் நாராயணன், வசனம் : சீனிவாச மூர்த்தி, பாடல்கள் : சினேகன், எடிட்டிங் : அஜித் உன்னிகிருஷ்ணன், நடனம் : சாமி பிள்ளை, ஸ்டண்ட் : பவன் சங்கர், கலை : பெனித் பத்தேரி, தயாரிப்பு :மகேஷ்வரன் நந்தகோபால், தயாரிப்பு நிறுவனம் : சூர்யா பிலிம் புரொடக் ஷன்ஸ். எழுத்து - இயக்கம் : பயஸ் ராஜ் (Pious Raj). 
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரிகுமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேள்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் படம் ‘தேள்’. இப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா நடித்திருக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    தேள் திரைப்படத்தின் போஸ்டர்

    ‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை - திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார். பிரபுதேவா - ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். சத்யா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    ×