search icon
என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம் மாஹாவீர்யார். இப்படம் பேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாலி ஜேஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.எஸ்.சம்னாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

    கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் எம்.முகுந்தன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். “மாஹாவீர்யார்” திரைப்படம் வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜு படங்களுக்கு பிறகு நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி இணைந்து பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் ஆகும். 

    நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி ஆகியோர் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். 

    நிவின் பாலி
    நிவின் பாலி

    அப்ரித் ஷைனி திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் எஸ் குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு, ஷைலஜா பி அம்பு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

    தொழில்நுட்ப குழுவில் சந்துரு செல்வராஜ் (ஒளிப்பதிவு), இஷான் சாப்ரா (இசை), மனோஜ் (எடிட்டர்), சவுண்ட் பேக்டர் சார்பில் விஷ்ணு கோவிந்த் மற்றும் ஶ்ரீ சங்கர் (சவுண்ட் டிசைன்) அனீஷ் நாடோடி (கலை இயக்கம்) சந்திரகாந்த் சொனாவானே மற்றும் மெல்வி J (உடைகள்) லிபின் மோகனன் (மேக்கப்) மற்றும் LB ஷ்யாம் லால் (புரொடக்சன் கண்ட்ரோலர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
    PSR Film Factory  தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் முன்னோட்டம்.
    சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் புதிய திரைப்படம் “கருப்பு கண்ணாடி”. PSR Film Factory  தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியது. 

    ‘கருப்பு கண்ணாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் பாணியில்,  உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுப்ரமணிய சிவா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். 

    கருப்பு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் தணிகை, சுப்ரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல்முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

    ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப், ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
    மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தின் முன்னோட்டம்.
    காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகி இருக்கிறது.

    சமுதாய அக்கறையோடு உருவாகும் இப்படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் சேர்த்து உருவாக்கி இருக்கிறார்கள். எனவே, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடியதாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.அருண்குமார் கவனிக்கிறார்.
    அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் முன்னோட்டம்.
    வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்த விஷ்ணு விஷால் அடுத்து நடித்துள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா ஆகிய மூன்று நடிகைகள் நடித்துள்ளனர்.

    ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப் பட்டிருக்கும் இப்படம் பிப்ரவரி 11-ந்தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை நடிகர் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைத்துள்ளார். 
    எம்.கே.என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பிரயான் பி ஜார்ஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கூர்மன் படத்தின் முன்னோட்டம்.
    டைரக்டர் பிரயான் பி ஜார்ஜின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம், கூர்மன். பிரபல தயாரிப்பு நிறுவனமான எம்.கே.என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர் மற்றும் பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

    கூர்மன்

    டோனி பிரிட்டோ இப்படத்திற்கான இசையினை இசையமைத்துள்ளார். படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் காட்சிப்படுத்த, அதனை எஸ் தேவராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் “நித்தம் ஒரு வானம்” படத்தின் முன்னோட்டம்.
    பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கியுள்ளார்.

    அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று வெளியிட்டார்.

    முன்னோட்டம்

    இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
    பாலகங்கா கிரியேஷன்ஸ் ஜி கே எம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மாலை படத்தின் முன்னோட்டம்.
    நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் 'மாலை'. இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது.

    ராபர்ட் மாஸ்டர் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ராஜேஷ் ராஜா. இவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

    இப்படத்தில் சங்கீதா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் அவர் சின்னச்சின்ன வேடங்களில் சில படங்களில் தலைகாட்டியவர். மகாலட்சுமி என்கிற குழந்தை நட்சத்திரம் படத்தில் அறிமுகமாகிறார்.

    மேலும் பல அறிமுகமான முகங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை பாலகங்கா கிரியேஷன்ஸ் ஜி கே எம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் 'மாலை' படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும்.
    சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் உருவாகும் மனோகரி படத்தின் முன்னோட்டம்.
    மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் " சிட்தி " படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் சிட்தி படத்தை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் "மனோகரி" என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.

    முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் வில்லனாக அறிமுகமாகிறார்.

    ஒளிப்பதிவு - K V.மணி, கார்த்திக் ராஜா இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார். எடிட்டிங் - SP அஹமது. கலை - தென்னரசு, ஸ்டண்ட் - S.சுரேஷ், நடனம் - ராதிகா, தயாரிப்பு மேற்பார்வை - ஹக்கீம் சுலைமான். தயாரிப்பு - மகேஷ்வரன் நந்தகோபால். தயாரிப்பு நிறுவனம் - சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ். லைன் புரொடியுசர் - P.V. தமிழ்செல்வன் & வேலவன் தியாகு, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - நவாஸ் அஹமது. 
    இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் விலங்கு வெப் தொடரின் முன்னோட்டம்.
    ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ஆட்டோ சங்கர், பிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ மற்றும் பல படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. தற்போது அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் "விலங்கு" என்ற வெப் சீரிஸை பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

    விலங்கு

    விலங்கு தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார், கலை இயக்குனர் - G.துரைராஜ்.
    கோவர்தனி மூவிஸ் சார்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வசனம் எழுதி, "வேலூர் வீரா" என்ற படத்தை பிரசாத் தயாரிக்கிறார்.
    ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து, பிழைப்பு நடத்துவதற்காக கணவன், மனைவி இருவரும் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். ஒருகட்டத்தில் கர்ப்பிணியான அவள் கண்முன்னே கணவனை கொலை செய்கின்றனர் வில்லன் கோஷ்டி. இதைக் கண்ட ஹீரோ, அநியாயத்தை தட்டிக் கேட்கிறார். அதனால் பிரச்னைகள் வருகிறது. நிறை மாத கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவதில் ஏற்படும் சவால்களை ஆக்க்ஷனோடு விறுவிறுப்பாக கதை, திரைக்கதை எழுதி, என்.பிரசாந்த் ஆர் இயக்குகிறார்.

    ஹீரோவாக என்.பி.ஆர் நடிக்கிறார். பாகுபலி பிரபாகர் வில்லனாக நடிக்கிறார். கர்ப்பிணி பெண்ணாக ஆதித்தி மைக்கேல் நடிக்கிறார். பிரபல பாடகர் எஸ்.பி.பி மைத்துனர் சுதாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மீனா வாசு, ரவி பிரகாஷ், தயானந்த், கிரிதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    என்.சுப்பா ரெட்டி, மடக்கா அரவிந்த் இருவரும் நிர்வாக தயாரிப்பு செய்கிறார்கள். அருணா பிரசாத், தேஜோ இருவரும் இணைத் தயாரிப்பை மேற்கொள்கின்றனர். என்.எஸ்.பிரஷு இசையமைக்கிறார். வி.கே.ராமராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கேரி பி.ஹெச் எடிட்டிங்கை கவனிக்கிறார். வடிவமைப்பு வெங்கட் ஆர்.கே, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

    வேலூர் பகுதிகளில் "வேலூர் வீரா" படப்பிடிப்பு வேகமாக நடைப்பெற்று வருகிறது!
    காவல்துறை உங்கள் நண்பன் திரைக்குழு “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புதுவகை ஜானரில் முதல்முறையாக “பி.ஈ. பார்” (B.E. BAR) திரைப்படத்தை உருவாக்குகிறது.
    காவல்துறை உங்கள் நண்பன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்தது. இந்த திறமைமிகுந்த திரைக்குழுவினர், “பி.ஈ. பார்” (B.E. BAR) என்ற தலைப்பில் தங்கள் இரண்டாவது திரைப்பட பயணத்தை தற்போது துவக்கியுள்ளனர். இந்த குழுவின் முந்தைய திரைப்படம் நமது மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்தது, ஆனால் இந்த இரண்டாவது படைப்பு , முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புது ஜானரில் உருவாகவுள்ளது. இக்கதையின் மையம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

    மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக சதுரங்க வேட்டை புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

    சுரேஷ்

    காவல்துறை உங்கள் நண்பன் பட இயக்குனர் ஆர்.டி.எம் இப்படத்தை இயக்குகிறார். தொழில்நுட்பக் குழுவில் விஷ்ணு ஸ்ரீ K.S., ஆதித்யா & சூர்யா (இசை), வடிவேல் & விமல்ராஜ் (எடிட்டிங்), சிவராஜ் (கலை), கல்லூரி வினோத் (வசனம்), ஞானகரவேல் & கானா பிரபா (பாடல் வரிகள்) ஆகியோர் பணிபுரிகின்றனர். 

    “பி.ஈ. பார்” (B.E. BAR) படத்தினை Absolute Pictures நிறுவனம் சார்பில் மால்கம், BR Talkies Corporation மற்றும் White Moon Talkies உடன் இணைந்து தயாரிக்கிறார். B. பாஸ்கரன், P. ராஜபாண்டியன், மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். 
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “ரத்தம்” படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கி பிரபலமானார். 

    இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன், எடிட்டிங் சுரேஷ், சண்டைக்காட்சிகள் திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
    ×