search icon
என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் "அழகிய கண்ணே" திரைப்படத்தின் முன்னோட்டம்.
    தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். இதில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

    பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ், அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

    கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஏ,ஆர்,அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
    பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ள ‘விசித்திரன்’ படத்தின் முன்னோட்டம்.
    மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.

    விசித்திரன் பட போஸ்டர்

    இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை மே மாதம் 20ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    வித்யா பிரதீப், நிகில் முருகன், அனித்ரா நாயர், சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பவுடர் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீஜி, வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.

    கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) சமீபத்தில் வெளியானது.

    அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள வலிமை படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது. கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் இதில் தோன்றியுள்ளார்.

    பவுடர் படத்தின் முன்னோட்டம்

    சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை தனக்கே உரிய பாணியில் ராகவன் கையாள்வதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    அனித்ரா நாயர், சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், 'சில்மிஷம்' சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.
    மாதவன் இயக்கத்தில் சிம்ரன், ஜெகன், சூர்யா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ராக்கெட்ரி’ படத்தின் முன்னோட்டம்.
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

    ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன்.

    பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, நடிப்பில் உருவாகி வரும் தீ இவன் படத்தின் முன்னோட்டம்.
    மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.J ,ஸ்ரீதர் , ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம்புலி, ஜான்விஜய், சரவனசக்தி, இளவரசு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தீ இவன். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது. 

    இப்படத்தின் பாடல்களை புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடிய பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி, செந்தில், தனி ஒருவன் படத்தில் கண்ணாலா கண்ணாலா... பாடலை பாடிய பத்மலதா என பல்வேறு பிரபல பாடகர்கள் பாடி உள்ளார்கள். ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாரித்து இயக்கிய T. M. ஜெயமுருகன் இப்படத்தை திரைக்கதை, பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலிமிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலா ஜெயமுருகன் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
    போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் முன்னோட்டம்.
    அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 

    அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    வலிமை படத்தில் அஜித்

    பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திரையரங்குகளில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் இப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் ஆர்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
    செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் காமன் மேன் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரிப்ரியா நடிக்கும் படம் "காமன் மேன்". ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தபடித்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த். 

    சமீபத்தில் விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. அவரது தோற்றம் ஒரு சாதாரணமாக  இருந்தாலும், அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும். இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
    பி.ஶ்ரீராம் தேவா, செவ்வானம் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்க, இயக்குனர் மதன் கேப்ரியல் இயக்கும் இருளி படத்தின் முன்னோட்டம்.
    சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வரை சென்ற “ஜெய்பீம்” படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது. இருளர்கள் வாழ்க்கை கதையில் ஒரு அருமையான காதல் திரைப்படமாக உருவாகும் படம் தான் “இருளி”  திரைப்படம்.

    முருகனுக்கு இனியவன் பி.ஶ்ரீராம் தேவா, செவ்வானம் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்க, இயக்குனர் மதன் கேப்ரியல் இப்படத்தை இயக்குகிறார். முரளிதரன் கதை எழுதியுள்ளார். வரும் 17.02.2022 அன்று மாசிமக பௌர்ணமி நாளில் கனடா நாட்டு டொரொண்டோவில் பாடல் பதிவு நடக்க, இங்கு மாமல்லபுரம் கடற்கரையில் முதல்கட்ட படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கவுள்ளது. P.B.பாலாஜி இசையில் அ.ப.ராசா பாடல் வரிகளுக்கு செந்தில் கணேஷ், ராஜலஷ்மி, முத்துச்சிற்பி, மும்பை ஹம்சிகா ஐயர், ரோஷினி, விதுயனி பரந்தாமன், சாய் சரன் முதலானோர் பாடுகிறார்கள். வரன் ஒளிப்பதிவு செய்ய இணைப்பதிவை பிரபாகரன், பாபு உதயகுமார், ஹரி சாந்தன் செய்கின்றனர். நிர்வாக தயாரிப்பை சந்துரு செய்கிறார். 

    இப்படத்தில் செந்தில் கணேஷ் (ராஜலஷ்மி), டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா முதலானோருடன்.. நடிப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

    முழுக்க முழுக்க இதுவரை திரைத்துறை கண்டிராத, இசை மற்றும் நடனம் ஒன்றாக கலந்த இருளர்கள் வாழ்வியலை இப்படம் காட்டவுள்ளது, அதனுடன் உணர்வுபூர்வமான காதல், கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படமாக இப்படம் உருவாகவுள்ளது.
    பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு 'முசாசி' என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசாசி". ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

    விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 

    பிரபு தேவா

    'முசாசி' என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
    நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.
    'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

    வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பொங்கல் திருநாளன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அத்துடன் 'ஆதார்' படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையையும் படக்குழுவினர் தொடங்கியிருக்கின்றனர்.

    படக்குழுவினர்

    எளிய மனிதர்களின் வலியைப் பேசும் யதார்த்தப் படைப்பாக உருவாகியிருக்கும் 'ஆதார்' படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக், டிரைலர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.
    கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கும் ”ரங்கோலி” படத்தின் முன்னோட்டம்.
    கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் ”ரங்கோலி”. இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

    இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரங்கோலி

    தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்திற்கு இசை- கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு- மருதநாயகம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
    டி.டி.எஸ்.பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், டி.துரைசாமி தயாரிப்பில் உருவாகும் ‘காதல் வேகம்’ படத்தின் முன்னோட்டம்.
    டி.டி.எஸ்.பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
     நிறுவனம் சார்பில், டி.துரைசாமி தயாரிப்பில் உருவாகும் படம் ‘காதல் வேகம்’. டி.துரை பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கெளசிக் நாயகனாகவும், சந்தியா கதாநாயகியாகவும், இரண்டாவது கதாநாயகியாக லைலா நடிக்கும் இப்படத்தின் துவக்க விழா சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது.

    இளையராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியதோடு, மேடை இசை நிகழ்ச்சிகளில் முதன்மையானவராக வலம் வந்த பிரபல இசைக்கலைஞர் எம்.வி.ரகு இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்ய, கோயா கலை இயக்குநராக பணியாற்றுகிறார். எம்.எல்.ஆனந்த் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஜான்சன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

    காதலால் ஒரு இளைஞரின் வாழ்க்கை எப்படி வேகம் எடுக்கிறது, என்பதை மையப்படுத்திய இப்படம் ஆக்‌ஷன், காமெடி, காதல்,செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது.

    காதல் வேகம்

    இப்படத்தின் துவக்க விழா ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் ஓய்.ஜி.மகேந்திரன், பாபு கணேஷ், பவர் ஸ்டார், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துக்கொண்டார்கள்.

    பாடல் பதிவு நடைப்பெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது!
    ×