என் மலர்
பைக்
ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஹார்னெட் 2.0 ரெப்சால் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய ரெப்சால் எடிஷன் விலை ரூ. 1.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள் லிமிட்டெட் எடிஷனாக கிடைக்கிறது. இந்த மாடல் பெயின்டிங் ஹோண்டா ரெப்சால் ரேசிங் அணியில் இருப்பது போன்று செய்யப்பட்டு இருக்கிறது. இது மற்ற ஹார்னெட் மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

இதுதவிர, புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹார்னெட் 2.0 மாடலில் 184 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 16.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் அப்சைடு-டவுன் போர்க்குகள், பின்புறம் பிரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இருபுறங்களில் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 75 அனிவெர்சரியோ எடிஷன் நொடிகளில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எம்வி அகுஸ்டா நிறுவனம் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சூப்பர்வெலோஸ் 75 அனிவெர்சரியோ எடிஷனை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஸ்டான்டர்டு சூப்பர்வெலோஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் நவம்பர் 14 ஆம் தேதி துவங்கி 75 மணி நேரம் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மாடல் மொத்தமே 75 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் விற்பனை துவங்கிய நொடிகளில் விற்று தீர்ந்துள்ளது.

சூப்பர்வெலோஸ் 75 அனிவர்சரியோ மாடலில் 798சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 147 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்து இருக்கிறது.
புதிய மாடல் ரோட்-ஒரியன்டெட் அட்வென்ச்சர் டூரர் ஆகும். இது சமீபத்தில் அறிமுகமான டைகர் 900 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இந்த மாடல் டைகர் 900 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புதிய பாடி கிராபிக்ஸ், டூயல் டோன் பெயின்ட்டிங் செய்யப்பட்டு உள்ளது.

டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் கிராபைட் / டைப்ளோ ரெட் மற்றும் கிராபைட் / கேஸ்பியன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஷீல்டு, ப்யூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட் மற்றும் எல்இடி லைட்கள் டைகர் 900 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் 888சிசி லிக்விட் கூல்டு இன் லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 82 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது டைகர் 900 மாடலை விட 10 பிஹெச்பி மற்றும் 5 என்எம் குறைவு ஆகும்.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இதனுடன் குவிக் ஷிப்டர் கூடுதல் அக்சஸரீயாக வழங்கப்படலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு காலாண்டிற்கு ஒன்று எனும் வீதத்தில் திட்டத்தை தீட்டி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக எண்ணிக்கையில் புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த தகவலை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் தசாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். அடுத்த ஏழு ஆண்டுகளில் 28 மாடல்களை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேவையான உற்பத்தி திறன் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இவை நிற வேரியண்ட்கள் இன்றி அனைத்தும் புதிய மாடல்கள் ஆகும். இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 250சிசி - 750சிசி பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பங்களை உருவாக்குவது, எலெக்ட்ரிக் மாடல்களை உற்பத்தி செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு உள்ளது.
இதுதவிர பெரும்பாலான நிதி சர்வதேச சந்தை விரிவாக்க பணிகளுக்கும் செலவிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளியான முதல் மாடலாக Meteor 350 சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விநியோகத்தில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் சிபி350 மாடல் ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
இந்த மைல்கல் விநியோகம் துவங்கிய 20 நாட்களில் எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎலஎக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்கள் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஹோண்டா ஹைனெஸ் மாடலில் 348சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 20.78 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Meteor 350 மோட்டார்சைக்கிள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் புதிய Meteor 350 மாடல் இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 349சிசி சிங்கிள் சிலிண்டர், யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 20.2 பிஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த குரூயிசர் மோட்டார்சைக்கிள் - பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் விலை ரூ. 1.76 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிக ஜாவா பெராக் மாடல்களை விநியோகம் செய்து இருந்தது. தற்சமயம் அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், 12 மாதங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
ஜாவா மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக புதிய மைல்கல் எட்டியுள்ளதாக கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்து இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நீண்ட இடைவெளிக்கு பின் ஜாவா பிராண்டு இந்திய சந்தையில் 2018 நவம்பர் மாத வாக்கில் அறிமுகமானது.

அறிமுகமானது முதல் முன்பதிவில் ஜாவா மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்பதிவு துவங்கிய சில காலத்தில் இதனை டெலிவரி காலம் எட்டு முதல் பத்து மாதங்களாக அதிகரித்தது. வரவேற்புக்கு இணையாக உற்பத்தியை வேகப்படுத்த கிளாசிக் லெஜண்ட்ஸ் முயற்சித்து வருகிறது.
சமீபத்தில் இந்தியா மட்டுமின்றி நேபால் மற்றும் ஐரோப்பியா போன்ற சந்தைகளிலும் ஜாவா பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அங்கும் ஜாவா மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பதாக கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்து உள்ளது.
அசத்தல் அம்சங்கள் நிறைந்த 2021 ஹோண்டா சிபி1000ஆர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனம் 2021 ஹோண்டா சிபி1000ஆர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடலில் மேம்பட்ட ஹெட்லேம்ப் பெசல், இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவை சுற்றி கவர் போன்ற பாதுகாப்பு, ரேடியேட்டர், சைடு பிளேட்களில் புதிய ஸ்டைலிங் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 மாடலில் டபிள்யூ ஸ்போக் கேஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் யுஎஸ்பி போர்ட், டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் சார்ந்த ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சிபி1000ஆர் மாடலில் 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 143 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இதே மாடலின் பிரத்யேக பிளாக் எடிஷன் ஆப்ஷனையும் ஹோண்டா வழங்குகிறது.
இந்திய சந்தையில் 2021 ஹோண்டா சிபி1000ஆர் மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1,15,715 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய புகை விதிகளுக்கும் பொருந்தும் அப்டேட் தவிர இந்த மோட்டார்தைக்கிள் புதிதாக பியல் பேட்லெஸ் வைட் எனும் நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பேந்தர் பிளாக் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

மேம்பட்ட பிஎஸ்6 மாடலில் 199.6சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 17.8 பிஹெச்பி பவர், 16.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பிஎஸ்6 ரக என்ஜின் புதிய நிறம் தவிர ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
யமஹா நிறுவனத்தின் எப்இசட்-எப்ஐ மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.
யமஹா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது எப்இசட்-எப்ஐ 150சிசி மோட்டார்சைக்கிள் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. அதன்படி பிஎஸ்6 யமஹா எப்இசட் மாடல் விலை ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி இந்த மோ்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 1.02 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.04 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யமஹா மோட்டார்சைக்கிள் விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. எனினும், விலை உயர்வுக்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
எம்வி அகுஸ்டா நிறுவனம் புதிதாக அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்வி அகுஸ்டா நிறுவனம் புதிதாக அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது. இந்த தகவலை எம்வி அகுஸ்டா தலைமை செயல் அதிகாரி திமுர் சர்தரோவ் தெரிவித்தார்.
புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட அட்வென்ச்சர் மாடல்களை எம்வி அகுஸ்டா உருவாக்கி வருகிறது. இத்துடன் 500சிசி மற்றும் 1000சிசி மாடல்களும் உருவாகின்றன.

இதில் 500சிசி மாடலில் போரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. இதன் 1000சிசி மாடலில் இன்லைன் 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படலாம். சந்தையில் அட்வென்ச்சர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால் எம்வி அகுஸ்டா புதிய மாடல்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
அசத்தல் அப்டேட்களுடன் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி நிறுவனம் புதிய மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய பிளாக்ஷிப் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் டுகாட்டி வொர்ல்டு பிரீமியர் வெப் சீரிசின் முதல் எபிசோடில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய வி4 மாடல் வி4, வி4 எஸ் மற்றும் வி4 எஸ் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், 22 லிட்டர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் சீட் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அலுமினியம் மோனோக் பிரேம், 19 இன்ச் முன்புற சக்கரம், டபுள் சைடெட் ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் டுகாட்டி குவிக் ஷிப்ட் அப் & டவுன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐஎம்யு, ஏபிஎஸ் கார்னெரிங், டுகாட்டி வீலி கண்ட்ரோல், டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் கார்னெரிங் லைட்கள், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல், செமி ஆக்டிவ் டுகாட்டி ஸ்கைஹூக் கண்ட்ரோல் சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.






