தொழில்நுட்பம்
டிராய்

செல்போன்களில் அழைப்பு ஒலி நேரம் 30 வினாடியாக மாற்றம் செய்த டிராய்

Published On 2019-11-02 10:03 IST   |   Update On 2019-11-02 10:03:00 IST
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செல்போன்களில் இன்கமிங் அழைப்புகளுக்கான ஒலி நேர அளவில் மாற்றம் செய்துள்ளது.



செல்போன்களுக்கு வரும் அழைப்புகளின் ஒலி நேரத்துக்கு இந்தியாவில் இது வரை வரையறை இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் 30 வினாடிகள் முதல் 45 வினாடிகள் வரை அழைப்பு ஒலி நேரத்தை வழங்கி வந்தன.

இந்த நிலையில் அழைப்பு ஒலி நேரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக செல்போன் நிறுவனங்களுக்குள் சர்ச்சை நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து அழைப்பு ஒலி நேரம் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராய் புதிய நடைமுறையை தெரிவித்துள்ளது.



அதன் படி செல்போனில் அழைப்பு ஒலி நேரம் 30 வினாடியாகவும், லேண்ட்லைன் போனில் அழைப்பு ஒலி நேரம் 60 வினாடியாகவும் இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இது இன்னும் 15 நாட்களில் அமலுக்கு வர உள்ளது.

முன்னதாக அழைப்பு ஒலி நேரத்தை 20 முதல் 5 வினாடியாக நிர்ணயிக்க வேண்டும் என்று ஜியோ நிறுவனம் வலியுறுத்தி இருந்தது. ஆனால் ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் 30 வினாடியில் இருந்து 70 வினாடிக்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் அழைப்பு ஒலி நேரத்தை 30 வினாடியாக டிராய் நிர்ணயித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

Similar News