தொழில்நுட்பம்
ஆப்பிள்

இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்

Published On 2021-01-18 04:10 GMT   |   Update On 2021-01-18 04:10 GMT
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வலைதளத்தில் ரூ. 44,900-க்கு மேல் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த சலுகை ஜனவரி 21 ஆம் தேதி துவங்கி ஜனவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

இந்த கேஷ்பேக் சலுகை HDFC வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இத்துடன் கேஷ்பேக் சலுகை ஆப்பிள் ஸ்டோர் எட்யூகேஷன் விலைக்கு பொருந்தாது. இதனால் கல்வி சலுகை விலையில் பொருட்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் சலுகை பொருந்தாது.



புதிய கேஷ்பேக் சலுகை பற்றிய தகவல் ஆப்பிள் ஸ்டோர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. வலைதள தகவல்களின் படி ரூ. 44,900 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவோர் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் மற்றும் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை வசதியை பெற முடியும்.

கேஷ்பேக் சலுகை ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் பொருந்தும். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை வாங்கி அதற்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் கோர முடியாது. இத்துடன் வாடிக்கையாளர் வழங்கும் கார்டு கேஷ்பேக் சலுகையை பெறுமா என்ற தகவல் பொருளை தேர்வு செய்த பின் தெரிவிக்கப்படும்.

பின் வாடிக்கையாளருக்கு பொருள் வினியோகம் செய்யப்பட்டும், இதைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் கேஷ்பேக் வழங்கப்பட்டு விடும். இதேபோன்ற விதிமுறைகள் வட்டியில்லா மாத தவணை முறை சலுகைக்கும் பொருந்தும்.
Tags:    

Similar News