தொழில்நுட்பம்
நோக்கியா போன்

ஜிஎஸ்டி மாற்றத்தால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு

Published On 2020-04-04 11:40 GMT   |   Update On 2020-04-04 11:40 GMT
ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.



இந்தியாவில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 இல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

அந்த வகையில் நோக்கியா 2.3, நோக்கியா 110, நோக்கியா 6.2, நோக்கியா 7.2, நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2, நோக்கியா 3.2 மக்கும் நோக்கியா 9 பியூர் வியூ உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது. 

விலை உயர்வின் படி நோக்கியா 2.3 விலை ரூ. 7585 என்றும், நோக்கியா 110 விலை ரூ. 1684 என்றும், நோக்கியா 6.2 ரூ. 13168 என்றும் நோக்கியா 7.2 ரூ.16330 என மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 மாடல்களின் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 மாடல்கள் முறையே ரூ. 1053, ரூ. 6320, ரூ. 10008 மற்றும் ரூ. 8428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 9 பியூர்வியூ மாடல் ரூ. 2678 விலை உயர்த்தப்பட்டு ரூ. 52,677 என மாற்றப்பட்டுள்ளது.
Tags:    

Similar News