தொழில்நுட்பம்
ஏர்டெல்

ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம்

Published On 2020-04-01 06:30 GMT   |   Update On 2020-04-01 06:30 GMT
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம் வழங்குவதாக இரு நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன.



வோடபோன் ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17 வரை வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டியை ஏப்ரல் 17 வரை நீட்டிக்கிறது.

இத்துடன் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குகின்றன. ஜீரோ பேலன்ஸ் டாக்டைம் கொண்ட அக்கவுண்ட்களுக்கு இலவச டாக்டைம் வழங்கப்படும் என அறிவித்து இருக்கின்றன. 

ஏர்டெல் நிறுவன தகவல்களின் படி சுமார் எட்டு கோடி வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து இன்கமிங் அழைப்புகள் வருவதோடு, ரூ. 10 இலவச டாக்டைம் வழங்கப்படுகிறது. 



ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை வாடிக்கையாளர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும் என ஏர்டெல் நிறுவம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு காரணமாக மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக்கு ஏற்ப டெலிகாம் நிறுவனங்கள் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச டாக்டைம் போன்ற சலுகைகளை அறிவித்து வருகின்றன. மொபைல் போன் போன்றே பிராட்பேண்ட் சேவைகளிலும் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News