தொழில்நுட்பம்
ரெட்மி கே30 ப்ரோ

ரெட்மி கே30 ப்ரோ போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போனாக வெளியாகாது

Published On 2020-03-31 09:32 GMT   |   Update On 2020-03-31 09:35 GMT
ரெட்மி பிராண்டின் கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.



இணையத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், போக்கோ எஃப்2 ரெட்மி கே30 ப்ரோ மாடலை விட வித்தியாசமானது என போக்கோ பிராண்டு பொது மேலாளர் சி மன்மோகன் தெரிவித்து இருக்கிறார்...

மேலும் போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக 2018 ஆண்டு வெளியிடப்பட்ட போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், லிக்விட் கூலிங் வசதியுடன் ரூ. 20,999 விலையில் வெளியிடப்பட்டது.

கடந்த வாரம் போக்கோ பொது மேலாளர் மன்மோகன் தனது ட்விட்டரில், மக்கள் போக்கோ பிராண்டிங்கின் கீழ் எதிர்பார்க்கும் சாதனங்களை தேர்வு செய்ய கோரினார். அதில் பெரும்பாலானோர் TWS ரக இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என பதில் அளித்து இருந்தனர்.

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி போக்கோ பிராண்டு TWS இயர்பட்ஸ் உருவாக்கி வருவதாக மன்மோகன் தெரிவித்து இருக்கிறார். விரைவில் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சியோமி நிறுவனம் TWS இயர்பட்ஸ் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இவை எதுவும் இந்திய சந்தைக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை. அந்த வகையில் போக்கோவின் TWS இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாதனமாக இருக்கிறது.
Tags:    

Similar News