தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

போலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்

Published On 2020-03-25 08:17 GMT   |   Update On 2020-03-25 08:17 GMT
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.



உலகில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போலி செய்திகள் பரவ வாட்ஸ்அப் தான் காரணமாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் தளத்தில் போலி செய்திகளை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சத்தினை உருவாக்கி வருவதாக தெரிகிறது. வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் பகிரும் ஃபார்வேர்டு மெசேஜ்களை வெரிஃபை செய்யும் வசதி சோதனை செய்யப்படுகிறது. செயலியில் சில க்ளிக்களை மேற்கொண்டால் இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அம்சம் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களில் ஏதேனும் தவறான தகவல் உள்ளதா என்பதை பயனர்கள் கண்டறிய வழி செய்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த அம்சத்திற்கென மேக்னிஃபையிங் கிளாஸ் பட்டன் ஐகான் வழங்கப்படுகிறது.



இதனை க்ளிக் செய்யும் போது, வாட்ஸ்அப் சார்பில் இணையத்தில் இதுபற்றி தேட விரும்புகின்றீர்களா? இந்த குறுந்தகவல் கூகுளுக்கு அப்லோடு செய்யப்படும் (“Would you like to search this on the web? This will upload the message to Google,”) என்ற தகவல் பாப் அப் முறையில் காண்பிக்கப்படும்.

பின் பயனர் “Search Web” அல்லது cancel போன்ற ஆப்ஷன்கள் காணப்படும். இதில் Search Web ஆப்ஷனை க்ளிக் செய்யும் போது குறுந்தகவல் போலியானது என்றால் அதுபற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் குறுந்தகவல் பற்றி அதிக விவரங்களை பயனர்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து புதிய அம்சங்களை உருவாக்க பணியாற்றி வருகிறோம். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News