தொழில்நுட்பம்
ஐபோன் 11

ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களின் விலை திடீர் உயர்வு

Published On 2020-03-03 04:29 GMT   |   Update On 2020-03-03 04:50 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஐபோன் மாடல்களின் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டது.



ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படும் பிரின்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி (PCBA) பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது. 

இதேபோன்று மொபைல் போன் உபகரணங்களான டிஸ்ப்ளே பேனல், டச் பேனல், மைக்ரோபோன் மற்றும் ரிசீவர் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரியினை 15 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் விலையை உயர்த்துவதாக கூறப்படுகிறது.



ஐபோன் 7 மற்றும் ஐபோன் ஐபோன் எக்ஸ்.ஆர். மாடல்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுவதால் இவற்றின் விலை உயர்த்தப்படவில்லை. ஐபோன் 11, ஐபேட் மாடல்களின் விலையும் உயர்த்தப்படவில்லை. மற்ற ஐபோன் மாடல்களின் விலை 1.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

உயர் ரக ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. மாடலின் விலை ரூ. 1,41,900 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,43,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ஐபோன் மாடல்களின் விலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்பட்டது. 

ஐபோன் மாடல்களின் புதிய விலை விவரங்களை கீழே காணலாம்..,



Tags:    

Similar News