தொழில்நுட்பம்
போகோ

குறைந்த விலையில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்

Published On 2020-01-24 10:49 GMT   |   Update On 2020-01-24 10:49 GMT
போகோ இந்தியா நிறுவனத்தின் புதிய விலை குறைந்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



இந்திய சந்தையில் போகோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் போகோ சியோமியில் இருந்து பிரிந்து தனி பிராண்டாக செயல்படும் என போகோ தெரிவித்தது.

போகோ பிராண்டு இந்தியாவில் தொடர்ந்து குறைந்த விலையில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என போகோ இந்தியாவின் பொது மேலாளர் மன்மோகன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் புதிய போகோ ஸ்மார்ட்போனில் உயர் ரக பிராசஸர், அதிகளவு ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



புதிய போகோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என போகோ தெரிவித்துள்ளது. போகோ பிராண்டிங்கில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் போகோ தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் போகோ எக்ஸ்2 பெயரில் ஒரு மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போகோ பிராண்டு விற்பனை,  விளம்பரம் மற்றும் சேவை பிரிவுகள் தனித்தனி குழுக்களாக இயங்கும் என்றும் விநியோகம், விற்பனை மற்றும் சர்வீஸ் உள்ளிட்ட பணிகளை சியோமி குழுமம் கவனித்துக் கொள்ள இருக்கிறது.
Tags:    

Similar News