தொழில்நுட்பம்
ஹுவாய் பி40 ப்ரோ ரென்டர்

ஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்

Published On 2020-01-17 10:48 GMT   |   Update On 2020-01-17 10:48 GMT
ஹூவாய் நிறுவனத்தின் புதிய பி சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இதில் ஐந்து பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.



ஹூவாய் நிறுவனத்தின் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அதன்படி புதிய ஹூவாய் பி40 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உருவாகி இருக்கும் பி40 ஸ்மார்ட்போனில் இரட்டை பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஐந்து பிரைமரி கேமரா, லெய்கா பிராண்டிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 52 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் அறிமுகமாக இருக்கும் பி40 ப்ரோ மாடலில் நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்களில் யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்பீக்கர் கிரில், பிரைமரி மைக்ரோபோன் வழங்கப்படுகிறது.



பக்கவாட்டில் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால், இதில் AMOLED ஸ்கிரீன் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் வளைந்த OLED ஸ்கிரீன், கிரின் 990 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த EMUI 10 இயங்குதளம் வழங்கப்படலாம். இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் அம்சம் வழங்கப்படலாம்.

சர்வதேச சந்தையில ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவனம் பி30 சீரிஸ் மாடல்களை இதே தேதியில் அறிமுகம் செய்திருந்தது.
Tags:    

Similar News