தொழில்நுட்பம்
ஏர்டெல்

ரூ. 279 மற்றும் ரூ. 379 விலையில் புதிய ஏர்டெல் சலுகைகள் அறிவிப்பு

Published On 2020-01-02 08:47 GMT   |   Update On 2020-01-02 08:47 GMT
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.



பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 279 மற்றும் ரூ. 379 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவற்றில் அதிவேக டேட்டா, எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் வின்க் மியூசிக் மற்றும் எக்ஸ்டிரீம் செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ. 279 சலுகையுடன் ரூ. 4 லட்சத்திற்கான உயிர் காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது. புதிய ரூ. 279 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்டாக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



ரூ. 379 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 6 ஜி.பி. அதிவேக டேட்டா, 900 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலியை பயன்படுத்தும் வசதி மற்றும் ஃபாஸ்டாக் வாங்குவோருக்கு ரூ. 100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ. 379 சலுகை சமீபத்தில் வோடபோன் ஐடியா அறிவித்த ரூ. 379 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 379 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிவேக டேட்டா மற்றும் 1000 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்களை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
Tags:    

Similar News