தொழில்நுட்பம்
மோட்டோ ஜி8 பிளஸ்

அமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2019-12-14 05:58 GMT   |   Update On 2019-12-14 05:58 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளத்தில் சான்று பெற்று இருக்கிறது.



மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.

அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளமான FCC-யின் சான்று பெற்று இருக்கிறது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் XT2041-1 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.




அமெரிக்க வலைத்தளத்தின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 26 வாட் டர்போ சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பின்புற கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News