தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

விரைவில் வாட்ஸ்அப் செயலியை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது

Published On 2019-12-12 09:05 GMT   |   Update On 2019-12-12 09:05 GMT
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி குறிப்பிட்ட தேதிக்கு பின் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.



உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. எளிமையான பயன்பாடு காரணமாக உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கும் வாட்ஸ்அப் செயலி ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் உள்ள எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால், வீடியோ கால் போன்ற அம்சங்களை கொண்டு பயனர்கள் உலகின் எந்த பகுதியில் இருப்பவரையும் இணைய வதியை பயன்படுத்தி மிக எளிமையாக தொடர்பு கொள்ள முடியும். 

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி பழைய ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கான சேவையை நிறுத்த போவவதை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கத்தை வாடிக்கையாக கொண்டுள்ளது.



அந்த வகையில் விரைவில் பல லட்சம் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்படி 2020, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஐ.ஒ.எஸ். 8 மற்றும் அதற்கு முன் வெளியான இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 2.3.7 மற்றும் அதற்கும் முந்தைய பதிப்புகளில் வாட்ஸ்அப் செயலி இயங்காது. எனினும், வாடிக்கையாளர்கள் இந்த இயங்குதளங்களில் ஜனவரி 31, 2020 நள்ளிரவு 11.59 மணி வரை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது செயலியை அன்-இன்ஸ்டால் செய்யும் முன் அவர்களின் சாட் விவரங்களை பேக்கப் செய்து கொள்ள முடியம். சாட் பேக்கப் செய்ய வாட்ஸ்அப் - மோர் ஆப்ஷன்ஸ் - செட்டிங்ஸ் - சாட் - சாட் பேக்கப் - பேக்கப் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 

இதேபோன்று ஐபோன் பயனர்கள் சாட் பேக்கப் செய்ய வாட்ஸ்அப் - செட்டிங்ஸ் - சாட் - சாட் பேக்கப் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
Tags:    

Similar News