தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ

ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது

Published On 2019-11-20 04:08 GMT   |   Update On 2019-11-20 04:08 GMT
வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.



நஷ்டத்தில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை செல்போன் சேவை கட்டணங்களை (அழைப்பு கட்டணம் மற்றும் இணையதள கட்டணம்) உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

அந்த வரிசையில் இப்போது ரிலையன்ஸ் ஜியோவும் இணைந்துள்ளது. இதையொட்டி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உள்ளது.



அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு அமலாக இருக்கிறது. இது குறித்து தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயுடன் ரிலையன்ஸ் ஜியோ ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு இணையதள பயன்பாட்டையும், டிஜிட்டல்மய வளர்ச்சியையும் பாதிக்காத வகையிலும், முதலீடுகளை நிலைநிறுத்துகிற வகையிலும் அமையும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News