தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாவில் பிழை கண்டறிந்து ஏழு லட்சம் வென்ற சென்னை வாலிபர்

Published On 2019-08-27 05:42 GMT   |   Update On 2019-08-27 08:28 GMT
இன்ஸ்டாகிராம் செயலியில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு ஏழு லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்ஸ்டாகிராமில் பிழை கண்டறிந்த சென்னை வாலிபருக்கு 10000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7.2 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிழையை கண்டறிந்த லக்‌ஷமன் முத்தையா ஜூலை மாதத்திலும் இன்ஸ்டா பிழையை கண்டறிந்திருந்தார். அப்போது அவருக்கு 30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21.6 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டது.

முத்தையா தற்சமயம் கண்டறிந்திருக்கும் பிழையும், கடந்த முறையை போன்றதாகும். கடந்த முறை இவர் கண்டறிந்த பிழையை கொண்டு எவர் வேண்டுமானாலும், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை தடையமின்றி ஹேக் செய்துவிடக்கூடிய சூழல் இருந்தது. எனினும், இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது.



இன்ஸ்டாகிராம் சர்வெரில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் கோளாறு இருப்பதாகவும், இதை கொண்டு பல்வேறு பயனர்களுக்கான பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என முத்தையா இம்முறை கண்டறிந்திருக்கிறார்.

இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு 10,000 டாலர்கள் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது. முத்தையா கண்டறிந்திருக்கும் பிழையை கொண்டு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை மிக சுலபமாக ஹேக் செய்திட முடியும்.
Tags:    

Similar News