தொழில்நுட்பம்
ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் அப்படி செய்யுமா? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2019-08-21 06:33 GMT   |   Update On 2019-08-21 06:33 GMT
ஃபேஸ்புக் தளத்தில் பயனர் புகைப்படங்களை பொது வெளியில் அம்பலப்படுத்துவது பற்றி வைரலாகும் தகவலின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



ஃபேஸ்புக் வலைத்தளத்தில் பயனர்கள் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை பொதுவெளியில் அந்நிறுவனம் அம்பலப்படுத்திவிடும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது. 

வைரலாகும் தகவலில் பயனர்கள் தங்களது புகைப்படங்களை பாதுகாத்துக் கொள்ள ஃபேஸ்புக் எனது புகைப்படம் அல்லது குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள எந்த உரிமையும் கிடையாது (FACEBOOK DOES NOT HAVE MY PERMISSION TO  SHARE PHOTOS OR MESSAGES) என்ற வாக்கில் தகவல் ஒன்றை ஸ்டேட்டஸ் ஆக பதிவிட கோருகிறது. 



ஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவை கொண்டு குறியீடுகளை ஆய்வு செய்ததில் இது ஃபேஸ்புக் மட்டுமின்றி ட்விட்டரிலும் வைரலாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்ற தகவல் ஏழு ஆண்டுகளுக்கு முன் வைரலானது. பின் அது போலியென கண்டறியப்பட்டது. தற்சமயம் இதே பதிவு மீண்டும் வைரலாகியுள்ளது.

வைரல் பதிவுகளில் ஃபேஸ்புக் அதன் பயனர்கள் பதிவிட்ட தரவுகளுக்கு உரிமை கோரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக் விதிமுறைகளில், “ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பயனர்கள் பிதிவிடும் அவர்களது சொந்த தகவல்களுக்கு அவர்கள் தான் உரிமையாளர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  




இதுதவிர பயனர்கள் பதிவிடும் தகவல்களை, பதிவேற்றம் செய்து அவற்றை உலகம் முழுக்க பிரசுரம் செய்ய, பயன்படுத்த, காட்சிப்படுத்த அவர்கள் அனுமதியளிப்பதாக ஃபேஸ்புக் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் பதிவிடும் தரவுகளுக்கு ஃபேஸ்புக் அனுமதி வைத்திருப்பினும், அதற்கு உரிமை கோர முடியாது.

இதனால் ஃபேஸ்புக் பற்றி வைரலாகும் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமூக வலைத்தளங்களில் வலம் வரும் தகவல்களை ஆய்வு செய்து, அவற்றின் உண்மைத்தன்மையை நன்கு அறிந்த பின் அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும். போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News