தொழில்நுட்பம்
பாப் அப் கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் - விரைவில் இந்திய வெளியீடு
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வழங்கியிருக்கிறது.
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பாப்-அப் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஹுவாய் வை9 பிரைம் 2019 என்ற பெயரில் அறிமுகமாகி அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக ஹூவாய் நிறுவனம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்த ஹவாய் பி ஸ்மார்ட் இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வை9 பிரைம் 2019 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹூவாய் வை9 2019 மாடலில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமராவும், முன்புறம் டூயல் செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது.
இதில் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் பாப்-அப் கேமரா வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஹூவாய் வை9 பிரைம் 2019 மாடலின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய முழு விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.