புதுச்சேரி
null

புதுச்சேரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு- ரங்கசாமி அறிவிப்பு

Published On 2024-03-03 05:02 GMT   |   Update On 2024-03-03 09:55 GMT
  • வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
  • புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

வேட்பாளர் பட்டியலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை, பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கரன், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தாலும் அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்க விரும்பவில்லை. உள்ளூர் அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட விரும்புகிறார்.

இதனால் வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் புதுவை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை நடந்தது.

முகாமை முதலமைச்சர் ரங்கசாமி ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி புதுவை எம்.பி. தொகுதி எங்கள் கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என்றார்.

Tags:    

Similar News