புதுச்சேரி

கைது செய்யப்பட்ட முருகன்.

சொத்து தகராறில் தந்தையை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற மகன் கைது

Published On 2023-03-23 13:27 IST   |   Update On 2023-03-23 13:27:00 IST
கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட முருகனின் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை கோட்டக்குப்பம் அடுத்த குயிலாப்பா ளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது72). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், முருகன், ஈஸ்வரன் ஆகிய 3 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.

முருகனும்,ஈஸ்வரனும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக பெரியசாமிக்கும் இவரது மகன்களான முருகன், ஈஸ்வரன் ஆகியோர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் முருகனும், ஈஸ்வரனும் சேர்ந்து தந்தை பெரியசாமியை அடிக்கடி தாக்கி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று கோட்டகுப்பத்தில் இருந்து கோட்டைமேடு வழியாக பெரியசாமி சைக்கிளில் குயிலாப்பாளையம் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆட்டோ ஓட்டி வந்த முருகன், பெரியசாமி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது வேகமாக மோதியதில் அவர் கீழே விழுந்து தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் பெரியசாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியசாமியின் மூத்த மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் முருகன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய 2 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட முருகனின் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். குயிலாப்பாளையத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தையை மகன்களே திட்டம் போட்டு ஆட்டோ ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News