புதுச்சேரி
காரைக்காலில் புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
- போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
- நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலையில் உள்ள மளிகை கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோந்து போலீசார், குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட ரூ.11 ஆயிரத்து 640 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர், நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை (வயது42) போலீசார் கைது செய்தனர்.