செய்திகள்
இவ்வளவு ரன்கள் என்றால் இந்தியா சேஸிங் செய்ய திணறும்: பிரெண்டன் மெக்கல்லம்
அரையிறுதியில் நியூசிலாந்து 250 ரன்கள் அடித்து டார்கெட் நிர்ணயித்தால் இந்திய அணி சேஸிங் செய்ய திணறும் என பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் நேற்று முழுவதும் ஆட்டம் நடைபெறவில்லை.
இதனால் ‘ரிசர்வ் டே’யான இன்று போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது. மழை குறுக்கீடு இந்தியாவுக்கே சாதகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கையில், நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், 250 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயித்தால் இந்தியாவுக்கு சிக்கல்தான் என்று தெரிவித்துள்ளார்.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து பேட்டிங் செய்யாமல் இருந்தால், இந்தியா 20 ஓவரில் 148 ரன், 25 ஓவரில் 172, 30 ஓவரில் 192 ரன், 35 ஓவரில் 209, 40 ஓவரில் 223 ரன், 46 ஓவரில் 237 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் ‘ரிசர்வ் டே’யான இன்று போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது. மழை குறுக்கீடு இந்தியாவுக்கே சாதகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கையில், நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், 250 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயித்தால் இந்தியாவுக்கு சிக்கல்தான் என்று தெரிவித்துள்ளார்.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து பேட்டிங் செய்யாமல் இருந்தால், இந்தியா 20 ஓவரில் 148 ரன், 25 ஓவரில் 172, 30 ஓவரில் 192 ரன், 35 ஓவரில் 209, 40 ஓவரில் 223 ரன், 46 ஓவரில் 237 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
Around 250 would never be enough in a bilateral series between these two teams on this surface but in a World Cup semi final....it may just be! 🧐
— Brendon McCullum (@Bazmccullum) July 9, 2019