உலகம்

4 கி.மீ. தொலைவில் இருந்த 2 ரஷிய வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று உலக சாதனை படைத்த உக்ரைன் வீரர்!

Published On 2025-08-17 21:56 IST   |   Update On 2025-08-17 21:56:00 IST
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' துப்பாக்கியால் 2 ரஷிய வீரர்களைக் அவர் கொன்றார்.
  • முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது.

ரஷியாவுடன் நடந்து வரும் போரில் உக்ரேனிய வீரர் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்துள்ளார்.

13,000 அடி (கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்த 2 ரஷிய வீரர்களை Sniper துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொன்றார். இதை உக்ரைன் செய்தித்தாள் கீவ் போஸ்ட் தெரிவித்தது.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 14 அன்று போக்ரோவ்ஸ்க் பகுதியில் நடந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' Sniper துப்பாக்கியால் 2 ரஷிய வீரர்களைக் அவர் கொன்றார்.

அலிகேட்டர் 14.5 மிமீ

இதை வெற்றிகரமாகச் செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது. 12,400 அடி தூரத்தில் இருந்து ரஷிய வீரர் ஒருவரை அவர் சுட்டுக் கொன்றிருந்தார். தற்போது அந்த சாதனையை மற்றொரு உக்ரேனிய வீரர் முறியடித்துள்ளார். 

Tags:    

Similar News