உலகம்

இன்று பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் - இந்தியாவுக்கு சிக்கலா?

Published On 2025-09-25 12:06 IST   |   Update On 2025-09-25 12:06:00 IST
  • இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது.
  • அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்காவில் இன்று டிரம்பை சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பிலும் ஷெரீப் கலந்து கொண்டார்.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்தாண்டு 2 முறை அமெரிக்காவிற்கு சென்று அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்

இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News