உலகம்

கொடூர குற்றவாளிகளுக்கான அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

Published On 2025-05-06 07:14 IST   |   Update On 2025-05-06 07:14:00 IST
  • சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை செயல்பட்டு வந்தது.
  • 1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொடூர குற்றவாளிகளுக்கான அல்காட்ராஸ் (Alcatraz) சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளை அடைத்து வைக்க, சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது.

1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்

தற்போது இச்சிறைச்சாலை சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News