உலகம்

இந்தியாவுக்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் பாகிஸ்தான்

Published On 2025-05-18 14:13 IST   |   Update On 2025-05-18 14:13:00 IST
  • அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.
  • 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் 32 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் தனது தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் தூதுக் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டமிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக பிலாவல் பூட்டோ தனது எக்ஸ் பதிவில், "பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னை தொடர்பு கொண்டு சர்வதேச அரங் கில் அமைதிக்கான பாகிஸ் தானின் நிலைப்பாட்டை முன்வைக்க ஒரு குழுவை வழி நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News