உலகம்

அயர்லாந்தில் கனமழை: ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

Published On 2025-10-05 04:53 IST   |   Update On 2025-10-05 04:53:00 IST
  • புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
  • அப்போது மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

டப்ளின்:

அயர்லாந்தில் உருவான ஆமி புயலால் கடந்த சில நாளாக பெய்த கனமழையால் டோனகல், லீட்ரிம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.

இதற்கிடையே புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.

ஆமி புயல் காரணமாக டப்ளின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 115 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். அதேபோல், ரெயில் சேவையும் கடுமையாக பாதிப்பு அடைந்தது.

Tags:    

Similar News