உலகம்

அமெரிக்காவில் இந்திய பெண் சுட்டுக்கொலை

Published On 2024-06-16 10:01 IST   |   Update On 2024-06-16 10:01:00 IST
  • இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.
  • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் என்பது தெரியவந்தது.

வாஷிங்டன்:

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர் கவுர் (வயது 29). இவர் தனது கணவருடன் அமெரிக்கா வின் நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜஸ்விர் கவுருடன் அவரது உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) என்பவரும் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் ஜஸ்விர் கவுர் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த ஜஸ்விர் கவுர், ககன்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டார். இதில் இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பெண்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்விர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப் கவுருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பஞ்சாப்பின் நகோதர் நகரை சேர்ந்தவர். அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News