உலகம்
லிபியாவில் சோகம்: விமான விபத்தில் ராணுவ தளபதி உள்பட 5 பேர் உயிரிழப்பு
- துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற லிபியா ராணுவ தளபதி அங்கிருந்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டது.
அங்காரா:
துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் சென்றார்.
கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது ராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சோகமான விபத்தில் ராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.