உலகம்

சீனாவில் பிரதமர் மோடியுடன் தனியாக காரில் வைத்து அதைப் பற்றி பேசினேன் - சீக்ரெட் உடைத்த புதின்

Published On 2025-09-05 04:30 IST   |   Update On 2025-09-05 04:30:00 IST
  • சுமார் 45 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் பேசினார்.
  • பிரதமர் மோடியிடம் விளக்கினேன்.

அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அங்கு வருகை தந்திருந்த ரஷிய அதிபர் புதினுடன் தனியாக காரில் சென்றபடி மோடி பேசிக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

இரு தலைவர்களும் சுமார் 45 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் பேசியதாக அப்போது ரஷிய அதிபர் மாளிகை (கிரெம்ளின்) வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் சீன பயணத்தை முடித்த பின்னர் புதின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கம் கொடுத்தார்.

காரில் மோடியுடனான உரையாடல் குறித்து ஒரு நிருபர் கேட்டபோது, "அதில் மறைக்க எதுவும் இல்லை. அலாஸ்காவில் டொனால்டு டிரம்புடன் நான் நடத்திய விவாதங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன்" என்று புதின் கூறினார்.

Tags:    

Similar News