உலகம்

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 சதவீதம் வீழ்ச்சி: சீனா

Published On 2025-06-09 17:56 IST   |   Update On 2025-06-09 17:56:00 IST
  • அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது.
  • இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வெகுவாக குறைந்தது.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும். இல்லையென்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அமல்படுத்தினார். பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டதன் விளைவாக 90 நாட்களுக்கு அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளார். அதேளையில் சீனா பதில் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனா அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்திருந்தது. தற்போது கடந்த மாதம் இது 28.8 பில்லியன் அமெரிக்க டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 10.8 பில்லியன் டாலர் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 12 சதவீதமாக இருந்தது. தற்போது 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவிற்கான ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரித்துள்ளது. ஜெர்மனிக்கான ஏற்றுமதி 12 சதவீத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது மொத்த ஏற்றுமதி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி 3.4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தக உபரி 103.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசினார். அப்போது வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Tags:    

Similar News