உலகம்

கராச்சியில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி

Published On 2026-02-20 01:34 IST   |   Update On 2026-02-20 01:34:00 IST
  • அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
  • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று அதிகாலை உணவு தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். ரமலான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் சிலிண்டர் வெடித்தது. இதில் அந்த குடியிருப்புக் கட்டடம் இடிந்து சரிந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கினர்.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News