உலகம்

பிரதமர் மோடி செல்ல இருக்கும் நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பயணத்தை ரத்து செய்த ஜப்பான்..!

Published On 2025-08-28 21:52 IST   |   Update On 2025-08-28 21:52:00 IST
  • ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது.
  • கிடைக்கும் வருவாயை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு.

இந்திய பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் சீனா செல்கிறார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் இருநாட்டின் 15ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ரியோசெய் அகாசவா, இன்று அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்ல இருந்தார்.

பேச்சுவார்த்தை முடிவில் 550 பில்லியன் டாலர் முதலீடு திட்டத்தை முறையாக உறுதிப்படுத்த இருந்தது.

அமெரிக்க தரப்புடன் ஒருங்கிணைப்பின் போது நிர்வாக மட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News