செய்திகள்

துபாயில் தவிக்கும் இந்திய குடுபத்தினருக்கு வாழ்வளிக்க முன்வந்த நிறுவனங்கள்

Published On 2018-07-09 15:34 GMT   |   Update On 2018-07-09 15:34 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாத சூழலில் தவிக்கும் இந்திய குடும்பத்தினருக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர். #UAE
துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் மதுசூதனன் என்ற 60 வயது இந்தியர் தனது 5 பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர் குறித்து சமீபத்தில் செய்தி வெளியானது. அதில் தானும் தன் குடும்பத்தினரும் சிறைக்கைதி போல வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த செய்தி மிக வேகமாக பரவியது. இந்நிலையில், வேலை வாய்ப்பின்றி இருக்கும் மதுசூதனனின் பிள்ளைகளுக்கு பணி வழங்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் உயர்த்தூதர் சுமதி வாசுதேவ், மதுசூதனனின் 5 பிள்ளைகளுக்கும் பாஸ்போர்ட் புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.#UAE
Tags:    

Similar News