உலகம்

எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக 20 மாகாணங்கள் வழக்கு

Published On 2025-12-13 18:50 IST   |   Update On 2025-12-13 18:50:00 IST
  • கட்டணத்தை வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
  • கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும்.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர். இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (ரூ.90 லட்சம்) உயர்த்தியது. இந்த கட்டணத்தை வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் தலைமையிலான 20 மாகாணங்களின் கூட்ட மைப்பு, மாசசூசெட்ஸ் கூட்டாட்சி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

அதில் எச்-1பி விசா கட்டண உயர்வு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய பொது சேவைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, டிரம்பின் சட்டவிரோதமான புதிய எச்-1பி விசா கட்ட ணம் உயர்வு என்பது ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவி லியர்கள் மற்றும் பிற முக்கிய துறைகளில் பணி யாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும்.

இது கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும் என்றார்.

Tags:    

Similar News