தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி

Published On 2025-08-01 11:27 IST   |   Update On 2025-08-01 11:27:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார்.
  • மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.

சென்னை :

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்றார்.

இதனிடையே, தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் ம.தி.மு.க. வெளியேறும் என்ற தகவலுக்கு வைகோ மறுப்பு தெரிவித்தார். 

Tags:    

Similar News