தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் சிக்கல்?

Published On 2025-09-11 10:28 IST   |   Update On 2025-09-11 10:28:00 IST
  • விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
  • த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.

விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.

திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 6-ந்தேதி அனுமதி கோரி மனு அளித்த நிலையில் விஜய் பிரசாரம் குறித்து பேச அழைப்பு விடுத்தும் த.வெ.க. நிர்வாகிகள் செல்லவில்லை என்றும், த.வெ.க. நிர்வாகிகள் பேசாததால் தற்போது வரை பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.

தற்போது வரை அனுமதி அளிக்கப்படாததால் விஜய் பெரம்பலூர் செல்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News