தமிழ்நாடு செய்திகள்

அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும்..- தீபாவளிக்கு விஜய் வாழ்த்து

Published On 2024-10-30 21:02 IST   |   Update On 2024-10-30 21:02:00 IST
  • அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீபாவிள வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி. செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.

தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News