மதுரையில் இன்று 2-வது மாநில மாநாடு: த.வெ.க.வின் புதிய பாடல் வெளியாகிறது
- மாலை 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையை அடுத்துள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வருவதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது.
இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாநாட்டிற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் த.வெ.க. மாநாட்டில் புதிய பாடல் வெளியாக உள்ளது. 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற தீமில் த.வெ.க.வின் புதிய பாடல் இன்று வெளியிடப்படுகிறது.
த.வெ.க. கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977-ல் தி.மு.க., அதி.மு.க, ஆட்சி அமைத்தது குறித்து விஜயின் பேச்சும் பாடலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.