தமிழ்நாடு செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் கனமழை: 1000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Published On 2025-11-22 18:55 IST   |   Update On 2025-11-22 18:55:00 IST
  • திருத்துறைப்பூண்டி அருகே 2 நாட்களாக பெய்த கனமழை பெய்தது
  • நாகை சுற்று வட்டாரப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்தது

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருசில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 2 நாட்களாக பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 1000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

மேலும், நாகை சுற்று வட்டாரப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 

Tags:    

Similar News