தமிழ்நாடு செய்திகள்
நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று கதவை தட்டிய பெண் - போலீசார் விளக்கம்
- இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
- அப்பெண் திருடுவதற்கு திட்டம் போட்டாரா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி 'அடிப்பட்டு வந்திருக்கேன்.. ஹெல்ப் பண்ணுங்க சார்' என கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் உண்மையாக உத்தரவு கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்காக திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இரு தினங்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.