அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான் - டிடிவி தினகரன் பேச்சால் பரபரப்பு
- கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க. இதுவரை ஏற்கவில்லை.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி அமைக்கப்பட்டது முதல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறி வருகிறார். அமித்ஷாவின் வார்த்தைகளையே அக்கட்சி நிர்வாகிகளும் தொடர்ச்சியாக மக்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர்.
ஆனால் கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க. இதுவரை ஏற்கவில்லை.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய எந்த கொம்பனாலும் முடியாது. கூட்டணி பற்றி கவலை இல்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஏமாளி அல்ல என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,
அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.