தமிழ்நாடு செய்திகள்

சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்பு

Published On 2025-12-11 13:17 IST   |   Update On 2025-12-11 13:17:00 IST
  • பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார்.
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார்.

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து வெங்கட்ராமனுக்கு பதில் பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் 15 நாட்கள் தொடர் விடுப்பில் உள்ளதால் அபய்குமாருக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News