தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (10.09.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-09-09 07:31 IST   |   Update On 2025-09-09 07:31:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
  • ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

பாரிவாக்கம்: அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, திருமணம், காவல்சேரி, வயலாநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்ச்சேரி, சித்துகாடு.

கோட்டூர்புரம்: ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை, வெங்கடாபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, சித்ரா நகர், ரிவர் வியூ ரோடு, மற்றும் ஹவுசிங் போர்டு.

Tags:    

Similar News