தமிழ்நாடு செய்திகள்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதமா?- ஆளுநர் மாளிகை விளக்கம்

Published On 2025-11-07 14:47 IST   |   Update On 2025-11-07 15:39:00 IST
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக 13 சதவீதம் மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை கிடப்பில் போட்டு, ஆளுநர் தாமதம் செய்வதாக தமிழக அரசு சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக 13 சதவீதம் மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 3 மாதங்களுக்குள் 95 சதவீதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாக அரசு வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற குற்ற்சாட்டுகளுக்கும் ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News