தமிழ்நாடு செய்திகள்

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தைவிட, கேடுகெட்ட ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது- அண்ணாமலை

Published On 2025-09-08 15:02 IST   |   Update On 2025-09-08 15:02:00 IST
  • ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
  • ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.க. ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தைவிட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News