போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு- ஜாமின் மனு தாக்கல் செய்கிறார் ஸ்ரீகாந்த்?
- வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
- கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமின் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும் வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார். இருப்பினும் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.